பெரியவங்க எல்லோரும் நமக்கு பல நல்ல விஷயங்களை பல்வேறு முறைகளில் சொல்லி கொடுத்திட்டு போயிருக்காங்க.
ஆனால் அதற்கான அர்த்தங்களை நாம சரியாக புரிஞ்சிக்காம போயிட்டோம். நம்மை வழி நடத்துகிற, நெறி படுத்திற, மேம்படுத்துகிற, வாழ்க்கையின் மிக பெரிய அழிக்க முடியாத விஷயங்களில் ஒன்றுதான் பழமொழி.
பழமொழி என்றாலே பழமையான மொழி. ஆனால் அதில் ஒளிந்திருக்கும் வாழ்க்கைக்கான அர்த்தங்கள் இனிவரும் காலங்களிலே யாராலுமே சொல்லவே முடியாத வாழ்க்கை பொக்கிஷம்.
நம்ம வீட்ல அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க, அதாவது அடுத்தவங்க வீட்டு குழந்தையை தூக்கி வளர்த்தால், நம்ம வீட்டு குழந்தை தானா வளரும்ன்னு. என்னுடைய சின்ன வயசில இதை பல தடவை நான் கேட்டு இருக்கேன். ஆனால் அதற்க்கான அர்த்தம் அந்த வயதில எனக்கு புரியும்படியாக சொல்லல.
ஆனால் இந்த காலத்திலும் இதற்க்கான அர்த்தம் பலருக்கும் அறியாத ஒன்றாகதான் இருக்கிறது.
என் பெரியவர்கள் சொன்ன விஷயத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்
ஒரு பெண் திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு செல்லும்போது தன்னை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், இதுவரை தான் வாழ்ந்த வீடு, வாழ்க்கை, எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு, தன் புகுந்த வீட்டுக்கு கடமையை செய்ய செல்கிறாள். இனிமேல் அவளுக்கு கணவனின் குடும்பம்தான் தன்னுடைய குடும்பம்.
அவ்வாறு செல்லும் பெண்ணை, தன் பெண்ணாக பாவித்து அவளுக்கு பிறந்த வீட்டில் கிடைத்த சந்தோஷத்தைவிட அதிகமாக கொடுத்து, அவளுக்கு எந்த குறையும் வைக்காமல் நன்றாக கவனித்தால், அவளுடைய வயிற்றில் வளரும் தன் குடும்ப வாரிசு நன்றாக வளரும் என்பதே இதன் உட்கருத்து.
ஆனந்தம்.
ஆனால் அதற்கான அர்த்தங்களை நாம சரியாக புரிஞ்சிக்காம போயிட்டோம். நம்மை வழி நடத்துகிற, நெறி படுத்திற, மேம்படுத்துகிற, வாழ்க்கையின் மிக பெரிய அழிக்க முடியாத விஷயங்களில் ஒன்றுதான் பழமொழி.
பழமொழி என்றாலே பழமையான மொழி. ஆனால் அதில் ஒளிந்திருக்கும் வாழ்க்கைக்கான அர்த்தங்கள் இனிவரும் காலங்களிலே யாராலுமே சொல்லவே முடியாத வாழ்க்கை பொக்கிஷம்.
நம்ம வீட்ல அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க, அதாவது அடுத்தவங்க வீட்டு குழந்தையை தூக்கி வளர்த்தால், நம்ம வீட்டு குழந்தை தானா வளரும்ன்னு. என்னுடைய சின்ன வயசில இதை பல தடவை நான் கேட்டு இருக்கேன். ஆனால் அதற்க்கான அர்த்தம் அந்த வயதில எனக்கு புரியும்படியாக சொல்லல.
ஆனால் இந்த காலத்திலும் இதற்க்கான அர்த்தம் பலருக்கும் அறியாத ஒன்றாகதான் இருக்கிறது.
என் பெரியவர்கள் சொன்ன விஷயத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்
ஒரு பெண் திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு செல்லும்போது தன்னை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், இதுவரை தான் வாழ்ந்த வீடு, வாழ்க்கை, எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு, தன் புகுந்த வீட்டுக்கு கடமையை செய்ய செல்கிறாள். இனிமேல் அவளுக்கு கணவனின் குடும்பம்தான் தன்னுடைய குடும்பம்.
அவ்வாறு செல்லும் பெண்ணை, தன் பெண்ணாக பாவித்து அவளுக்கு பிறந்த வீட்டில் கிடைத்த சந்தோஷத்தைவிட அதிகமாக கொடுத்து, அவளுக்கு எந்த குறையும் வைக்காமல் நன்றாக கவனித்தால், அவளுடைய வயிற்றில் வளரும் தன் குடும்ப வாரிசு நன்றாக வளரும் என்பதே இதன் உட்கருத்து.
ஆனந்தம்.